வயிறு மற்றும் நுரையீரல் நோயுள்ளோருக்கு வாய் நாற்றமடிப்பது அதிகமாக இருக்கும். அவ்வாறுள்ளோர் தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே வாய் நாற்றம் நீங்கும்.
அவ்வாறான நோயின்றி, சாதாரணமாக வாய் நாற்றமுள்ளோர்கள், காலையில் மட்டுமின்றி இரவு சாப்பாட்டிற்கு பிறகும் பல்துளாக்க வேண்டும்.
மேலும் எலுமிச்சை சாறு கலந்த நீரினால் காலை - மாலை வாய் கொப்பளிக்க வேண்டும்.
வாயில் ஒரு ஏலக்காயைப் போட்டு மென்று அடக்கிக் கொண்டால், மற்றவர்களிடம் பேசும்போது, அவர்கள் முகம் சுழிக்காமல் இருப்பார்கள், தினமும் இரண்டு ஏலக்காய்களை சாப்பிடுவது, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
No comments:
Post a Comment