குப்பை மேடாகிக் கிடக்கும் வரலாற்றுப் பேழை:
எண்ணூர் கடற்கரை நெடுஞ்சாலையில், சுங்கசாவடிக்கு (டோல்கேட்) அருகில், 'ஷாவாலா' மில்லுக்கு எதிரில் குப்பை மேடாகக் கிடக்கும் இந்த கட்டிடம் என்னவென்று தெரியுமா?
இரண்டாவது உலக மகா போரின் போது, விமானத் தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக கட்டப்பட்ட பதுங்கு குழிகளில் இதுவும் ஒன்று என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீச பறந்து வரும்போது, எச்சரிக்கை 'சைரன்' அலறும். உடனே எல்லோரும் இந்த கட்டிடத்தில் பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டால் குண்டு வீச்சின் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
உண்மையில், வரலாற்றுப் பேழையான இது குப்பை மேடாகிக் கிடப்பது பரிதாபம்!
படம்: Z. மெஹர் அலி (New College)
No comments:
Post a Comment