Shop at Amazon

Thursday, May 31, 2018

மருதாணியின் மருத்துவ குணங்கள்




மருதாணி பெருஞ்செடி அல்லது சிறு மரப்பிரிவைச் சேர்ந்த தாவரம். மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் பூசலாம்.

மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில் தேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும்.

புண், நகப்புண், சுளுக்கு இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். அம்மை நோய் ஏற்படும் போது கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க மருதாணி இலையை அரைத்து இரு காலடிகளிலும் வைத்துக்கட்டலாம். நகங்களில் தடவினால் நகம் சிவக்கும்.

ஆறு கிராம் எடை கொண்ட இலையை எடுத்து ஒரு பூண்டும், மிளகு ஐந்தும் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உப்பில்லாமல் சாப்பிட்டு வந்தால் வெண் புள்ளிகள் நீங்கும்.

மருதாணி இலையை வெந்நீரில் ஓர் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் இறுத்து இருபது நாட்கள் வரை காலையில் மட்டும் குடித்து வர சொறி, படைகள் நீங்கும்.

மருதாணி இலையை அரைத்து ஒரு கரண்டி சாறு எடுத்து 90 மில்லி பாலுடன் கலந்து கொடுக்க கை கால் வலி நீங்கும். இதன் பூவை இரவில் தூங்கும் போது தலையணையின் கீழ் வைத்து தூங்கினால், நல்ல உறக்கம் வரும்.
வெப்பம் குறையும். விதைகளின் ஊறல் கஷாயத்தை தலைவலிக்கு ஒத்தடம் கொடுக்க குணமாகும்.

இலைகளை அரைத்துப் பூசினால் தலைவலி நீங்கும். இதன் விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தேய்த்தால் எரிச்சல் குறைந்து குளிர்ச்சி கிடைக்கும். இதுவாத நோய்களை குணமாக்குகிறது.

சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்



சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

இரத்த குழாய் அடைப்பு நீங்கும்
அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.

சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.

நெறிகட்டிகள் குணமாகும்
சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.

சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்.

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்





வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

* வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

* உணவில் வெக்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால் குறையும்.

* ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். பிறகு உங்கள் அடி பாதத்தின் வளைவு பகுதியில் வெங்காயத்தை வைத்து அதன் மேல் சாக்ஸ் அணிந்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு முழுக்க இதை விட்டுவிடுங்கள். இது நச்சுக்கள் குறைய பெருமளவு உதவும்.

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!



பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது.

பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

* சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

* பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?

கார்த்திக் சூர்யா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்.

“பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம்.

க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.
 
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.”

Sunday, May 27, 2018

ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்







1.உரிமையாளர் - அனில் அகர்வால்
2.தலைமையிடம் - இலண்டன்,இங்கிலாந்து
3.நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ்
4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி
5.முக்கிய உற்பத்தி - தாமிரம் (copper )
6.கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்
7.முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்
8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா
9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி
10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்
11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு
12.அடிக்கள் நாட்டியவர் - முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994
13.ஆலை இயங்க அனுமதியளித்தவர் - முதல்வர் மு.கருனாநிதி 1996
14.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்
15.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996
16.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை
17.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி
18.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7
19.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
20.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)
21.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
22.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)
23.ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு
24.ஆறாம் விபத்து - நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்
25.உற்பத்தி செய்தது - 2லட்சம் டன் (2005 கணக்கில்)
26.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28
27.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா
28.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்
29.தமிழ்நாடு பசுமை வாரிம் - தடை
30.தேசிய பசுமை வாரியம் - அனுமதி

 இது போன்று பலத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. சுற்றுசூழலை, இயற்கையை, நம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அவை அனைத்தையும் முற்றிலுமாக தகர்ப்போம்.

Saturday, May 26, 2018

ஏலக்காயின் நன்மைகள்


ஏலக்காயின் நன்மைகள்


ஏலக்காய் பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி அடங்கியுள்ளன.

மேலும் இவை பித்தம் அகற்றி, நரம்புத் தளர்ச்சியை நீக்கி, வலுப்படுத்தும் தன்மையது. ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய்ய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொள்ளு









'இளைத்தவன் எள்ளு விதைப்பான், 

கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்' 

என்பது பழமொழி.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொள்ளுவில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது.
இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.

கொள்ளு ஊற வைத்த தண்ணீரில் மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளுவை சூப் வைத்து கொடுத்தால், சளி காணாமல் போய்விடும்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும்போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.
 
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

தினம் காலையில் நொய்யரிசியும் கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்

வவ்வாலின் மூலம் நோய் பரவுகிறது என்ற கூற்று கார்பரேட்களின் கனவு திட்டம்




வவ்வாலின் மூலம் நோய் பரவுகிறது என்ற கூற்று கார்பரேட்களின் கனவு திட்டம்


 வவ்வாளை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கலாம்

 (கீழே உள்ள பதிவு வவ்வாலின் பயன்களை அலசும் போது கிடைத்த ஒன்று)
 
சமீபக் காலங்களில் மனிதர்கள் வவ்வால்களின் பயன்பாடுகளை வெகுவாக அறிந்து வருகின்றார்கள். பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர்.
 இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.

மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(mastiff) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன.


சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை. இதிலிருந்து இவை மனித குலத்திற்கு ஆற்றக்கூடிய அளவற்றத் தொண்டினை வார்த்தைகளினால் எங்ஙனம் விளக்க இயலும். பல நாடுகளில் இன்று மக்களுக்கு நோய்களையும் இன்னபிற தொல்லைகளையும் கொடுக்கும் கொசுக்களை அழிக்க பட்ஜட் போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. இவைகளின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற்று வருவதாக அரிய வந்துள்ளது. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன. பல நாடுகளில் இவை வசிக்கக்கூடிய இடங்களிலிருந்து இவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான மிக உயர் தரமான உரம் தயாரிக்கப்படுகின்றது. இவையும் இவற்றின பயன்பாடுகளின் மிகமுக்கியமானதாகும்.

மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன
வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேரும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன. பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வரலாறும் நமக்கு காணக்கிடைக்கின்றது.

கார்பரேட்
சரியாக வருமான காய் நகர்த்துகிறான் நிபா எதுவரை போகும் என்று தெரிய வில்லை ஆனால் வவ்வாலை இனிமேல் நாம் விலங்குகள் சரணாலயத்தில் தான் பார்க்க முடியும்.

தகவல் :- சித்த மரபினர் கூட்டமைப்பு

Saturday, May 19, 2018

தற்சார்பு : தமிழ் ஈழம் - விடுதலை புலிகளின் செயல்பாட்டின்போது



தற்சார்பு:


இந்தப்பதிவில் ஈழம் மற்றும் புலிகளைப்பற்றிய தற்சார்பு என்ற பார்வையில்...


புலிகள் ஆயுத போராட்டத்தை கையிலெடுத்தாலும் நாளடைவில் அதற்கான செலவினங்களில் உள்ள வணிகத்தை அறிந்தபிறகு அவர்களே தங்களுக்கு தேவையானதை தயாரித்தலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்ததும், பனை மரங்களின் பயண்பாட்டை உச்சத்தில் வைத்திருந்தது மட்டுமே இந்த வணிக உலகிற்கு உறுத்தியது… உலகில் நடக்கும் அத்துனை போராட்டங்களும் ஏதோ ஒரு வகையில் வணிகசம்பந்தமில்லாமல் நடப்பதில்லை… இதை உடைத்து வெளியே வந்ததுமில்லாமல் US டாலரில் பரிவர்ததனையில்லை என்பதுவே பிரச்னை… US டாலரில் பரிவர்ததனையில்லை என்று சொன்ன லிபிய அதிபரை புரட்சி என்கிற பெயரில் கொன்றார்கள்… ஆனால் ஈழத்தில் நிலமை வேறு அதையும் மீறி தற்சார்பாக வாழத்தொடங்கியிருந்தது அந்த அங்கீகரிக்கப்படாத நாடு… இந்த வணிக கட்டமைப்பிலிருந்து தற்சார்புக்கு திரும்பியதில் என்னென்ன காரணங்கள் என்பதை புலிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தெரிந்திருக்கும்… ஆனால் அவர்களின் பாதை சரியானது அதனாலேயே இராணுவத்தை மட்டும் வெல்லாமல் பொது மக்களையும் சேர்த்தே இன அழிப்பு செய்தார்கள்! பொது மக்களின் அழிப்பை அவர்களின் தற்சார்பை சிதைத்தாகவே கருதுகிறேன்..

வணிக இயங்கியலை உடைத்து தற்சார்பை நோக்கி நகர்ந்த உண்ணதமான போராட்டம்… பிரித்தாளும் சாதி, மதம் , பெண்ணியம் என்ற எந்த ஒரு கருத்தியலும் பேசாமலேய நடைமுறையில் எந்த பிரச்னையுமில்லை! இதை இராணுவ ஆட்சியில் பயம் காரணமாக இப்படித்தான் மக்கள் இருப்பார்கள் என காரணம் சொல்லுபவர்களுமுண்டு… எதற்கும் மதிப்பேயில்லாத மக்களாட்சிக்கு சிறந்த தலைவனைக்கொண்ட இராணுவ ஆட்சி மேல்!

இதிலிருந்து அறிவது என்னவெனில் நீங்கள் தெரிந்தோ / தெரியாமலோ / வேண்டுமென்றோ தற்சார்பை கையிலெடுக்கும்போது வணிகம் தன் வேலையை இப்படி காட்டுமென்பது மிகப்பெரிய படிப்பினை… அப்ப வணிகம் எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்…

இவ்வளவு பெரிய சாதனையை புலிகள் கட்டியெழுப்ப எடுத்த நேரமும் போராட்டங்களும் கணக்கிலடங்காது…

இதை இப்படியே தமிழகத்தில் தற்சார்பை கொண்டுவர எவ்வளவு நேரமாகும் என்பதை பட்டியிலிடுகிறோம்…

*மதுவை ஒழிக்கவேண்டும்

*பனை மரங்களின் பயண்பாட்டை அதிகரிக்கவேண்டும்

*சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும்

*இயற்கை வேளாண்மையை கையிலெடுக்கவேண்டும்

*கிரிக்கெட் / சினிமா மோகத்தை ஒழிக்கவேண்டும்

*மதங்களில்லாமல் வாழப்பழகவேண்டும்

*மாநில சுயாட்சி (தற்போது பெயரளவில் மட்டுமே)

*தன்னலிமில்லா செயலாற்றும் தலைமை வேண்டும்

*மாணவர்களும் பெண்களும் அரசியலில் இறங்க வேண்டும்

*மரபு அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துதல்

*தற்போதைய கல்விமுறையை ஒழித்து தமிழகத்திற்கேற்ப கல்வி முறை வேண்டும்..

*நிலம் சார்ந்த மருத்துவம்

*நிலம் சார்ந்த உணவு


இது ஒரு எகா பட்டியலே இதில் எத்தனையை உங்களால் அடையமுடியும் அதன்காலத்தையும் நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்… 9 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் இவற்றில் எத்தனை சாத்தியப்பட்டது என தெரிந்துகொள்ளுங்கள்…

வணிக கட்டமைப்பை உடைத்து தற்சார்பை இந்த நூற்றாண்டில் செய்து காட்டியவர்கள் புலிகள் அவர்கள் எதில் வீழ்ந்தார்கள் என்பதை கவனித்து அதற்கேற்ப பயணித்தால் சாத்தியமென்பதற்கான பதிவு!

#தற்சார்பு_வாழ்வியல்

நன்றி. வெ.செ. இரமேசு பழஞ்சூர் மாகாளியர்

Friday, May 18, 2018

பப்பாளி (Papaya)




பப்பாளி:

யாருக்கு நல்லது: 
மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்:
கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.





பயன்கள்:

* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Tuesday, May 15, 2018

குப்பை மேடாகிக் கிடக்கும் வரலாற்றுப் பேழை: எண்ணூர் அருகில்





குப்பை மேடாகிக் கிடக்கும் வரலாற்றுப் பேழை:



எண்ணூர் கடற்கரை நெடுஞ்சாலையில், சுங்கசாவடிக்கு (டோல்கேட்) அருகில், 'ஷாவாலா' மில்லுக்கு எதிரில் குப்பை மேடாகக் கிடக்கும் இந்த கட்டிடம் என்னவென்று தெரியுமா?

இரண்டாவது உலக மகா போரின் போது, விமானத் தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக கட்டப்பட்ட பதுங்கு குழிகளில் இதுவும் ஒன்று என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?


குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீச பறந்து வரும்போது, எச்சரிக்கை 'சைரன்' அலறும். உடனே எல்லோரும் இந்த கட்டிடத்தில் பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டால் குண்டு வீச்சின் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உண்மையில், வரலாற்றுப் பேழையான இது குப்பை மேடாகிக் கிடப்பது பரிதாபம்!

 படம்: Z. மெஹர் அலி (New College)

Sunday, May 13, 2018

சிறுநீரக நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நாள்தோறும் இரண்டரை லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். வியர்க்க வியர்க்க வேலை செய்யும் போது அடிக்கடி தண்ணீரை குடித்துக்கொள்வது மிக அவசியமானது. வாரத்தில் இரண்டு நாட்கள் வாழைத்தண்டு, முள்ளங்கி ஆகியவற்றையும் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். 

Saturday, May 12, 2018

What sort of Leaders needed for UNO? | ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும்?



                      What sort of Leaders needed for UNO?


ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

 



வாழத் தெரியாதோர் பலர் வாழும் நாட்டில், ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடக்கும்!































தற்போது வேதாத்திரி மகரிசி ஐயா அவர்களது வைரலாக பரவும் தத்துவம்!




"வாழத் தெரியாதோர் பலர் வாழும் நாட்டில், ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடக்கும்!"


விளக்கம் :
1. வாழ்வின் நோக்கமான இறை (கடவுள்) உணர்வு பெற்று,
2. அதன்படி இறைநீதி (செயல் விளைவுத் தத்துவம் - எந்த செயல் செய்தாலும் அதற்கு தகுந்த விளைவு உண்டு) வழி வாழ்வது,
3. உயிர் அறிவை (எல்லா உயிர்களும் ஒன்றே) உள்ளுணர்வாய் பெறுதல், இயற்கையோடு ஒன்றி வாழ்தல்,
4. இறைஉணர்வோடு கலந்த அறநெறியான வாழ்க்கை (ஒழுக்கம், கடமை, ஈகை)
இவை வாழ்நாள் முழுக்க கடைபிடித்து வாழ்பவர் ஒரு நாட்டில் வாழத்தெரிந்தோர் ஆவர்!

இப்படி வாழ்வதன் மூலமாக ஒரு நாட்டின் தலைவர் இப்படிதான் சரியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லா மக்களிடத்திலும் இருக்கும்.. அது போன்ற தலைவரையே ஆளத்தெரிந்தோர், ஆட்சியை சரியாக நடத்துவோர் என்று கூறி அவரையே ஆட்சி தலைவராக தேர்ந்தேடுப்பர்!
 

---------------------------------------------------
தற்போதைய சூழலில் மனிதனுக்கு வாழவே தெரியவில்லை.. புலன் கவர்ச்சியில் (ஐம்புலன் இன்பம்) சிக்கி தவிக்கிறான். ஆசையை பேராசையாக மாற்றிக்கொள்கிறான். தடுமாறுகிறான், தடம் மாறுகிறான் (பாதை மாறுகிறான்). இதன் மூலமாக தன்னிலை மறக்கிறான். தன்னுடைய வாழும் முறையை மறக்கிறான். வாழ்வின் நோக்கத்தை மறக்கிறான்.

அதனால் அவனுக்கான சரியானத் தலைவனை தேர்ந்தேடுக்க தெரியவில்லை. எனவே ஆளத் தெரியாதோர் ஆட்சிக்கு வருகின்றனர், நம்மை வாட்டி வதைக்கின்றனர்..!

இதற்கு காரணம் உலக அரசியல் நம்மை சிந்திக்க விடாமல் ஆட்டிப் படைக்கின்றனர். அவர்கள் திட்டமிட்ட வாழும் முறையை திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கின்றனர். அதை அறிந்து புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள் மக்கள்!


வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 🙏🕊️

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!






நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!

- தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்..

இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.

''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''

''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''

''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''

''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''

''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்' தேர்வு.''

''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''

''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''

''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''

அனில் சடகோபால்''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''

''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''

"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''

''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''

''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''

விழித்துக்கொள்ளுங்கள் மக்களே!!

Saturday, May 5, 2018

வாய் நாற்றம் மாற என்ன செய்ய வேண்டும்?

வாய் நாற்றம் மாற என்ன செய்ய வேண்டும்? 

வயிறு மற்றும் நுரையீரல் நோயுள்ளோருக்கு வாய் நாற்றமடிப்பது அதிகமாக இருக்கும். அவ்வாறுள்ளோர் தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே வாய் நாற்றம் நீங்கும்.

அவ்வாறான நோயின்றி, சாதாரணமாக வாய் நாற்றமுள்ளோர்கள், காலையில் மட்டுமின்றி  இரவு சாப்பாட்டிற்கு பிறகும் பல்துளாக்க வேண்டும்.

மேலும் எலுமிச்சை சாறு கலந்த நீரினால் காலை - மாலை வாய் கொப்பளிக்க வேண்டும்.

வாயில் ஒரு ஏலக்காயைப் போட்டு மென்று அடக்கிக் கொண்டால், மற்றவர்களிடம் பேசும்போது, அவர்கள் முகம் சுழிக்காமல் இருப்பார்கள், தினமும் இரண்டு ஏலக்காய்களை சாப்பிடுவது, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Tuesday, May 1, 2018

வாய்ப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்?

குறிப்பு : 1
கொப்பரைத் தேங்காய் துண்டை வாயில் போட்டு, நன்றாக மென்று, அப்படியே கொப்பளித்து முடிந்தவரை அடக்கி வைத்து துப்பிவிடவும், இப்படி தினமும் 3 முறை செய்தால் சில தினங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


குறிப்பு : 2

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.


குறிப்பு : 3



கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
 

Watch this Video