Shop at Amazon

Saturday, June 23, 2018

பகவான் - ஒரு நல்லாசிரியர்



Image may contain: 1 person, standing and outdoor




"மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன்.
மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். அது தவிர மாணவர்களுக்கு எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்கு அதை வாங்கித் தருவேன்.

மாணவர்கள் அவர்களது வீட்டில் எனக்காகவே சமைத்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அது தவிர மாணவர்களின் வீட்டில் என்ன செய்தாலும் எனக்காகப் பெற்றோர்கள் கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான் ஒரு பிள்ளையாகவே இருக்கிறேன். நான் பள்ளியில் சேர்ந்த 2016-ம் ஆண்டு பவித்ரா என்ற மாணவி ஆங்கிலப் பாடத்தில் 94 மதிப்பெண் உட்பட மொத்தம் 482 மார்க் பெற்றார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியே தான் பாடம் நடத்துகிறேன். தினமும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நீதிக் கதைகளையும் உண்மைச் சம்பவங்களையும் எடுத்துச் சொல்வேன், மாணவர்கள் தீய வழிக்குப் போகாத வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். இதனாலேயே மாணவர்களுக்கு என்மீது பாசமும் பற்றும் அதிகமாகின. அதனால்தான் எனக்கும் மாணவர்களை நிறைய பிடிக்கும். அவர்களும் என்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்ப்பார்கள்"

(செய்தி: ஆனந்தவிகடன்)

இப்படியான ஆசிரியர்களைத் தான் இத்தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்கிறது. கொண்டாடுகிறது.
வாழ்த்துகள் நல் ஆசிரியர் பகவானே.

Saturday, June 16, 2018

'மூதேவி' என்பது தமிழர்கள் வணங்கிய பெண் தெய்வம்





மூதேவி என்பது தமிழர்கள் வணங்கிய பெண் தெய்வம்.

மூதேவிக்கு மாற்றாக வைணவம் முன்னிறுத்திய பெண் தெய்வம் தான் சிரீதேவி.

மூதேவி என்பது மூத்தவள் என்பது தான்.
சிரீதேவி மூதேவிக்கு இளையவள்.
தமிழ்நாட்டில் மூதேவிக்கு கோவில் உண்டு.
மூதேவி எனும் பெண் தெய்வம் நிலம் சார்ந்த பெண் தெய்வம்
உரம் சார்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
வயல்வெளிகளில் மூதேவி சிலைகள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டது.
மூதேவியின் மார்புகள் திரண்டும்
வயிறு புடைத்தும் திரண்டு காணப்படுவது வளமையின் அடையாளமே.
பார்ப்பனியம் சிரீதேவியை முன்னிறுத்தி மூத்த தமிழ் பெண் தெய்வத்தை இழிவாக மூதேவி என்று சொல்லுமளவுக்கு மாற்றியது.
நாமும் சிரீதேவிகளின் சிவப்பு தோலுக்குப் பின்னால் அணி திரண்டோம்.

மூதேவியே நமக்கான மூத்த தேவி. அவள் கையிலிருந்த கிளி தான் சமணர்கள் காலத்தில் இயக்கி என்ற பெண் தெய்வமாக மாற்றப்பட்டது. அந்த இயக்கி என்ற பெண் கடவுள் தான் இசக்கி என்று இன்று அழைக்கப்படுகிறது.
மூதேவியிடம் இருந்த கிளியைத்தான் ஆண்டாள் தோளில் வைணவமும், மீனாட்சி,காமாட்சி தோள்களில் சைவமும் கொடுத்து தன்னை நிலைநிறுத்தியது.

சிரீதேவி அடக்கம் செய்யப்படட்டும், மூதேவிகள் முன்னிலை பெறட்டும்.

பின் இணைப்பு :
  • நிலம் சார்ந்த தெய்வம் மூதேவி.
குறிஞ்சி,முல்லை,மருதம் என்ற மூன்று நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது.

குறிஞ்சியில் திணை வகைகள்,கிழங்குகள் பயிரிடப்பட்டன.
முல்லையில் காட்டு வேளாண்மையாகிய சிறுதானியங்கள்,கொடிக் கிழங்குகள் பயிரிடப்பட்டன.

மருதத்தில் நெல் வகைகள்,கரும்பு,காய்வகைகள் பயிரிடப்பட்டன.
இம்மூன்று நிலங்களிலும் வளமை தரும் தாய் ஆதலால்,மூதேவி என்று அழைக்கப் பட்டாள்.

அவளின் துணை தெய்வங்கள்,மாடன்,மாடத்தி.அதாவது காளை,பசு.
இங்குபகிர்ந்த சிற்பத்தில் மாடன்,மாடத்தி இருப்பதைக் காணுங்கள்.

  • இது கூட மறிவிய உருவம் தான் எருமை தலையுடன் அருகில் அமர்ந்ததாக காட்டப்பட்டிருப்பது எருமயை பயன்படுத்தி வேளாண்மை செய்ததற்கு அடையாளம் அது கிளியல்ல தமிழ் தேசியபறவை மரகதம்(குமரி மாவட்டத்தில் குக்கில் என்று அழைக்கப்படுகிறது) சிலை உருவமாக நீங்கள் காட்டியிருப்பதை விட கருத்து தெரிவிப்பதற்காக அருணாசங்கர் அவர்கள் போடப்பட்டிருக்கும் செப்பு தகட்டில் காட்டப்பட்டிருக்கும் உருவம் ஓரளவுக்கு பொருந்தும் காதில் பாம்படம் என்ற அணிகலன் தான் காட்டப்பட்டிருக்கிறது.

Tuesday, June 12, 2018

தினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா?







ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். 

நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம். 

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.

நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும். அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.
நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.

தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.

Friday, June 8, 2018

பாம்புக் கடி! - என்ன செய்ய வேண்டும்?





ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?

சித்த வைத்தியத்தால் முடியும்..!

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் மருத்துவரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.

பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...

"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம்.
 மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".



அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.

மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்..

 

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? - பிரம்மிப்பூட்டும் இரகசியம்!





மணமகளுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.

அந்த நேரங்களில் பெண்ணே ஒரு பசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.


மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,

ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது._

கோட்டை கட்டுவது - விதை காக்கும் பேரறிவு


வைக்கோல் பிரி, வைக்கோல், சாணம் ஆகியவற்றை கொண்டு பந்து போல் செய்து அதனுள்ளே விதை நெல்லை கொட்டி வைப்பார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உயிர்ப்புத்தன்மையோடு அப்படியே இருக்கும். இதற்கு கோட்டை கட்டுவது என்று பெயர். நம் முன்னோர்கள் கண்டுபிடித்த விதை காக்கும் பேரறிவு.

Thursday, June 7, 2018

மனைவி ஒரு மாணிக்கம்



பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.

மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.

அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல. 

நீ வழங்கும் சம தானம்.
 

இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.


இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.
உப்பு காய்கறிக்கு கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.


உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்க தவறாதே.
சின்னச் சின்ன சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள்.
அடிக்கடி உறவு வைத்தால்
அலுத்துமே போய்விடும்
அவ்வப்போது உறவுகொண்டால்
ஆனந்தம் பெருகிடும்.


அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு.
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு.
சிலநாளில் காலைவரை
அவள் அழகாய் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன்கை தேநீர் வழங்கட்டும்
உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே
உன்னவள் உன் மார்பில்தூங்க‌
ஓரிடம் கொடுக்க தவறாதே.


தாமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல்.
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள்.
வேலைக்குச் செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவையவளுக்கு போட்டுவிடு.


சிறப்பான நிகழ்ச்சி எதற்கும்
தேடி அவளை கூட்டிச்செல்
எடுப்பான பெண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொள்.
நோயிலே அவள் வீழ்ந்தால்
பாயாகி விடு.
நோவொன்று அவள் கண்டால்
தாயாகி விடு.


உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.
ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு.
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு.
வேளை வரும் போதெல்லாம்
வெளியே அழைத்துச்செல்.


வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள்.
அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை.
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை.
அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி.


அவளுக்கும் மனசிருப்பதை
உன் மனம்புரிந்தால் பெறுமதி.
தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்தே உறங்கிவிடு.
சாகப்போகும் நேரத்திலும்
அவள் கை பிடித்துவிடு...

Saturday, June 2, 2018

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்!





சுண்டைக்காய் சற்று கசப்பாக இருந்தாலும், அதிக மருத்துவ குணங்களை கொண்டது. இவ் சுண்டைக்காய், பொதுவாக இருவகைப்படும். அவையாவன, மலைச் சுண்டை, ஆனைச் சுண்டை



மருத்துவக் குணங்கள்
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 கப் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள். மூலம் குணமாகும்.

சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மா விதை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 கப் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும்.

இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.