Shop at Amazon

Sunday, December 30, 2018

ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது

இதை படிக்கும் முன் ஒரு முறையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு படிங்க..

1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது  உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள்  இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.

2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை,  11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம்  ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்'  என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது

'சமூகம்' பெரிதும் பாதிக்கப்படுகிறது எப்படிப்பட்ட மனிதர்களால்?



1.  'செயல், விளைவு - நல்லதா?  கெட்டதா?' என்று ஆராயாமல் உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிபவர்கள்.

2.   பணம், புகழ், பதவி என்ற பேராசைக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவார்கள்.

3.   அறியாமை, முயலாமை, இயலாமை, கல்லாமை, புரிதலின்மை போன்றவைகளை உடையவர்கள்.

4.  'தான்' என்ற ஆணவம் கொண்டவர்கள்

அறிவின் குறைபாட்டால் சுயநலத்தால் அனைத்து தவறுகளையும் செய்கிறான்.
 அறிவில் தெளிவும் விளக்கமும், தூயசிந்தனையும், நல்லஎண்ணமும், நல்லபண்பும், நல்லொழுக்கமும், நல்லகல்வியும் அறியுடைமையை அமையசெய்யும்!





Sunday, December 16, 2018

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்..

திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!

அன்புள்ள அம்மா,

எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .

பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.

வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது

எத்தனை பொறுப்புகள்?

எத்தனை சுமைகள்?

எத்தனை எதிர் பார்ப்புகள்?

எத்தனை தியாகங்கள்?

எத்தனை ஏமாற்றங்கள்?

நினைத்த நேரத்தில், நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..

குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..

உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..

இங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..

இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லிச் செல்ல இயலவில்லை.

என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..

நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.

எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..

சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..

இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..

என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது

உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே!

உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது.

உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது அம்மா

வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ..

உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..

ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்.

நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..

நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா?

நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாரா அன்பையும் நான் திருப்பித் தர வேண்டாமா.. என்று நினைத்து கொள்கிறேன்..

அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..

அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது

காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..

நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..

உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்.

ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..

நன்றிம்மா…

என்றும் அன்புடன்…!!

        உன் தேவதை

*பெண் அன்பில் ஒரு தாய்*

*பெண் அழகில் ஒரு தேவதை*

*பெண் அறிவில் ஒரு மந்திரி*

*பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு*

*பெண் வெற்றிக்கு ஒரு மாலை*

*பெண் நட்பில் ஒரு நேர்மை*

*பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்*

*மொத்தத்தில் பெண் தியாகத்தின் மறு உருவம்*

Sunday, December 2, 2018

சிட்டுக்குருவியும் 2.0வும் - எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு.கோவை சதாசிவம்

திரைக்கலைஞர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட "2.0 " திரைப்படம் வெளியானதிலிருந்து பல முகநூல் நண்பர்கள் அலைப்பேசியில் அழைத்த வண்ணமாக உள்ளார்கள்!


என்னை அழைக்க வேண்டிய அவசியம் என்ன ...?

2005-யில் "சிட்டு " என்கிற தலைப்பில் ஒரு விவரணப்படத்தை இயக்கி சிட்டுக்குருவிகளின் அழிவையும் அதனை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தேன். இப்படம் வெகுமக்களுக்கு செல்லவில்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சென்றுள்ளது.

இப்போது 2.0- திரைப்படம் வெளியாகி சிட்டுக்குருவிகளைப்பற்றி பலரையும் பேச வைக்கிறது. இப்படம் பறவைகளின் அழிவைப்பேசுகிறது என்று ஆறுதல் கொண்டாலும் பல அபத்தங்களையும் உள்ளடக்கியது என்பதை கவனத்தோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

இப்படத்தின் சிட்டுக்குருவியும், செல்போன் டவர்களும் முதன்மையான பேசு பொருளாக உள்ளதாம் (நான் இன்னமும் படம் பார்க்கவில்லை) செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பதிற்கான அறிவியல் தரவுகள் நம்மிடமில்லை! 

ஆனாலும் ஒரு செய்தியை இங்கே பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பெரும் அளவில் தனியார் வசமுள்ளது. ஒரு செல்போன் டவரில் 10,000 செல்பேசிகளுக்கான சேவையை வழங்க வேண்டிய நிறுவனம். லாப நோக்கில் 30,000 செல்பேசிகளுக்கு வழங்க நேர்ந்தால் இழுவிசை, பரவுவிசை அதிகரித்து கசியும் கதிர்வீச்சில் தேனீக்கள் உள்பட சிறு பறவைகளின் வாழ்வும் திசைமாறும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது!
ஆனால் இவை மட்டுமே காரணம் என்று கருதிவிடக்கூடாது! 2005 - யில் சிட்டு விவரணப்படம் சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு முன்மொழிந்த காரணங்களை பார்ப்போம்!

கால நகர்தலில் உறைவிடங்கள் மாறின, உற்பத்தி பண்பாடும் உணவு முறைகளும் மாறின, உழவு முறை மாறியது, மனித உழைப்பை வேக, வேகமாக மென்று துப்பும் உலகமயத்தொழில் வளர்ச்சி உயிர்களிடம் கொண்டுள்ள அன்பின் ஈரத்தைக்காயடித்துவிட்டது. வெறும் எந்திரங்களாய் ஆனோம் நாம்.

தானியம் போன்ற திட உணவுகளை செரிக்கும் செரிமான உறுப்புகள் குஞ்சுகளுக்கு வளர்ச்சியுற்றிறாத நிலையில் வீடுகளைச்சுற்றிலும் வளர்ந்து கிடக்கும் அவரை, புடலை போன்ற கொடித்தாவரங்களில் தோன்றும் புழுக்களை தாய்பறவை கொத்தி வந்து குஞ்சுகளுக்குக்கொடுத்து வளர்க்கும். இப்புழுக்களை குஞ்சுகள் எளிதாக செரித்து விடும். புழுக்களில் நீர்ச்சத்தும், புரதச்சத்தும் இருப்பதால் குஞ்சுகள் விரைந்து வளரும்.

முன்பெல்லாம் வீடுகளில் தானியங்களை உரலில் இடித்து புடைக்கும் பழக்கம் இருந்தது. இவ்வகை வேலைகளை பாட்டிகள் திறம்படச்செய்வார்கள். புடைக்கும் போது சிதறும் தானியங்களை தாய்பறவை சேகரித்து குஞ்சுகளுக்கு கொடுப்பதோடு அவற்றை கொத்தித்தின்னப்பழக்கும். இப்போது உரல், உலக்கை, முறம், பாட்டி ... யாருமில்லை ஊருக்குள்!

ஒற்றை உணவிற்குப்பழக்கப்பட்டு சோளம், கம்பு, கேழ்வரகு. குதிரைவாலி, தினை, சாமை போன்ற தானிய உணவுகளை இழந்தோம். விசாலமான வாழ்விடங்கள் சுருங்கி நாமே கூடுகளில் வாழ்கிறோம்! குருவிகள் எங்கே வாழும் ..? 

மனிதர்களின் வாழ்வோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி ( பசுமை, வெண்மை புரட்சிகளைப்போல்)  இயற்கைக்கு எதிரான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் காரணங்களால் சிட்டுக்குருவி மட்டுமன்று. ஒட்டுமொத்த சிற்றுயிர்களின் அழிவிற்கும் காரணியாக உள்ளது.
வெளிக்காற்று உட்புகாதவாறு கட்டமைக்கப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளின் வாழ்விடம் தகர்ந்தது.

காரீயம் நீக்கப்பட்ட பெட்ரோல், எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் "மெத்தைல் நைத்திரேட் " எனும் வேதிக்கழிவுப்புகையால் காற்று மாசுபடுகிறது. அந்தக்கரிக்காற்றை சுவாசிக்க முடியாமல் பூச்சியினங்கள் மூர்ச்சையற்றுப்போகின்றன. பூச்சிகளை உணவாகக்கொண்டு வாழ்ந்து வந்த பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போகிறது.

ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பல்லுயிர்ப்பெருக்க வாழ்வு முறை தகர்கிறது. இதன் தாக்கத்தை உலகின் பல்வேறு நாடுகளும் உணர்ந்துள்ளன.எனவேதான் ஐக்கிய நாடுகள் சபை 2010- ஆண்டை பல்லுயிர் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளது. வயல்களில் பயிர்களுக்கு தெளிக்கும் உயிர்க்கொல்லி இரசாயனங்கள் பூச்சிகளை அழித்து உணவையும் நஞ்சாக்கிய பிறகு, சாப்பிட எதுவும் கிடைக்காத பசித்த குருவிகள் கத்திக்கத்தி ஓய்ந்துவிட்டன. பல சரக்கு கடைகளில் உள்ள உணவுப்பொருட்கள் நெகிழிப்பைகளில் அடைத்து விற்கப்படுவதால் உணவுப்பொருட்கள் சிதறலுக்கு வாய்ப்பில்லை!

புழக்கடையில் பாத்திரம் தேய்த்த காலம் போய் வீட்டுக்குள் சின்னத்தொட்டியில் பாத்திரம் கழுவ, மீதப்பட்ட சோற்றுப்பருக்கைகள் பாதாளச்சாக்கடையில் கழிவோடு கழிவாய் மூழ்கிவிடுகின்றன. நகருக்குள் மனிதர்களை அண்டி வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
பூவுலகில் இயற்கை உருவாக்கியுள்ள உயிர்ச்சூழலை சிதைப்பதும், அழித்தொழிப்பதும் எந்த வகையிலும் நேர்மையாகாது. இயற்கையை அழிப்பதும் ஓர் பயங்கரவாதம்தான்! அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நீடித்த வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். தற்காலிக முயற்சிகளுக்கும் ஒரு சிலரின் பேராசைக்கும் பூமியை பலியிட முடியாது! உலகில் தோன்றியுள்ள கோடான கோடி உயிர்களில் நமது உயிரும் ஒன்று.

சூழலுக்கும், நெடுங்கால வளர்ச்சிக்கும் பங்களிக்கும் கரிசனத்தை "சிட்டு " விவரணப்படம் பேசியுள்ளது. "2.0" சிட்டுக்குருவிகளின் அழிவு குறித்து முன்வைக்கும் காரணங்களை அலசி, ஆராய்ந்து பார்க்க வேண்டும்!

Saturday, November 10, 2018

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

யாரையாவது வாழ்த்தும்போது பொதுவாக பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது வழக்கம்.


16 - என்னவென்று பார்ப்போம்

1.  புகழ்
புகழோடு வாழ வேண்டும்

2. கல்வி
கண்போன்ற கல்வியை கற்று வாழ்தல் வேண்டும்

3. வலிமை
வலிமையுடன் பொலிவுடன் வாழ வேண்டும்

4. வெற்றி
வெற்றி, வீரத்துடன் வாழ வேண்டும்

5. நன் மக்கள்
நன்மக்களை பெற்று வாழவேண்டும்

6. பொன்
பொன்னோடும், பொருளோடும் வாழ வேண்டும்

7. நெல்
உழவுசெய்து நெற்களஞ்சியத்துடன் வாழ வேண்டும்

8. நல் விதி
நல்ல ஊழ் நமக்குத் துணை நிற்கவேண்டும்

9. நுகர்ச்சி
பாடுபட்டு தேடிய பல   னை அனுபவிக்க பாக்கியம் வேண்டும்

10. அறிவு
பிறர் துன்பம் போக்கிட பரந்த மனம் வேண்டும்

11. அழகு
பிறர் நம்மைக்கண்டு பழிக்காமல் வாழ்தல் வேண்டும்

12. பெருமை
ஆடம்பரமில்லா நற்பண்புடன் வாழ வேண்டும்

13. இனிமை
இனிமையோடு இல்லறத்தில் வாழ வேண்டும்

14. துணிபு
அடுத்தவர்களுக்கு அஞ்சாமல் வாழ வேண்டும்

15. ஆரோக்கியம்
ஆரோக்கியத்துடன் சுகமாக வாழ வேண்டும்

16. நீண்ட ஆயுள்
நீண்ட ஆயுளுடன் முதிர்ந்த வயதோடு வாழ வேண்டும்

Wednesday, October 24, 2018

மாமிசம் மனித உணவா?






Read or otherwise Watch this Video

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
 
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள்
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள்


இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்:

1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு.
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.
அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.
சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன. அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

3. கால் விரல்கள்:-
சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

4. குடல் அமைப்பு:
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும், அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

5. சமநிலையான உடல் உஷ்ணம்:
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.
ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

6. மலத்தின் தன்மை
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.
அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

 இனி மனநிலையில் ஆராயலாம்:  
1. வாழும் முறை :
சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.
ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

2. இயல்பு :
சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

மன இறுக்கம்:-
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?
ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.
இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.
இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.
மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.
ஆனால்,
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )

உதாரணமாக,
சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்
மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.
இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.
எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
கோபம் இல்லாமலும்,
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.


சுயமாய் சிந்தித்தே தெளிவோம்..

Sunday, October 7, 2018

தமிழ்மொழி செம்மொழி..!!



நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!!

"தம்பி"..  மூன்றெழுத்து..!!

"தங்கை".. மூன்றெழுத்து..!!

"மகன்".. மூன்றெழுத்து..!!

"மகள்".. மூன்றெழுத்து..!!

"காதலி".. மூன்றெழுத்து..!!

"மனைவி".. மூன்றெழுத்து..!!

"தாத்தா".. மூன்றெழுத்து..!!

"பாட்டி".. மூன்றெழுத்து..!!

"பேரன்"..மூன்றெழுத்து..!!

"பேத்தி".. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

"உறவு".. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!

"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!

"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

விமர்சனம் எப்படி வருமோ..
என்ற "கவலை".. யும்
மூன்றெழுத்து..!

"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!

"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!

"வெல்க, வாழ்க " "தமிழ்"...!! 

சிவபெருமான் கொடுத்த சுதந்திரம்.. மறைக்கப்பட்ட வரலாறு..



1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்.

மௌன்ட்பேட்டன் நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கபோகிறோம் அதை எப்படி கொடுப்பது என்று கேட்க,  நேருவுக்கும் குழப்பமாக இருந்தது.

 எதை அடையாளமாக வைத்து பெறுவது? உடனே மூதறிஞர் ராஜாஜியை அணுகி நான்நாத்திகன் எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது அதனால் தாங்கள் தான் தீர்வுகூற வேண்டும்...

உடனே ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதியமன்னருக்கு குடுத்து ஆட்சிமாற்றம் செய்வர்.

நாமும் அன்னியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குருமகானின் கையால் செங்கோலை பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார்.

 நேருவும் நேரம் குறைவாக உள்ளது உடனே ஏற்பாட்டை செய்யுங்கள் என்று உத்தறவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு  விசயத்தை சொல்ல அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம்அவர்கள் உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முலாம் பூசி இளையஆதீனம் தம்பிரான்பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்டைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் (தேவாரத்தில் இருந்து கோளறுபதிகம் பதினோரு பாடல்களை குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாடவேண்டும்.)உடன் அனுப்பிவைத்தார்.

 ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத்தளையில் இருந்து  பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர் அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌன்பேட்டனிடம் இருந்து செங்கோலை குருமகாசன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து ஓதுவார்மூர்த்திகள் வேயிறுதோளிபங்கன் என்று துவங்குகிற தேவாரதிருப்பதிகத்தை பாட பதினோராவது பாடலின் கடைசி வரி. " அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."  இந்தவரி பாடி முடிக்கும் போதுதான் சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.

அந்த நிகழ்வை தான் நாம் சுதந்திர தினமாக கொணடாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை இந்த விசயத்தை பாடப்புத்தகத்தில் வெளியிட்டு நாடறிய செய்யாமல் சதிசெய்தது. நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறிய செய்வோம்.

திருவாவடு துறை ஆதீனமடத்தில் செங்கோல் வைபவ கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது .

சாப்பிட்டவுடன் படுக்காதே.. ஏன்?

‘சாப்பிட்டவுடன் படுக்காதே’ என வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘ஏன் படுக்கக் கூடாது?’ எனக் கேட்டால், ‘அது உடலுக்கு நல்லது அல்ல…’ என்று மட்டும் சொல்வார்கள். நாம் உட்கொள்ளும் உணவை செரிமானத்துக்கு உகந்ததாக மாற்ற, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இந்த அமிலம் உணவுக்குழாயில் பயணிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, மேல்நோக்கியும் பின்னோக்கியும் அமிலங்கள் போகும். இதனால், உணவுக்குழாய் பாதிக்கப்படும். இதற்காகத்தான் சாப்பிட்டவுடன் படுத்தால், உடலுக்கு நல்லது அல்ல என நம் பெரியவர்கள் சொன்னார்கள்.

இன்று, புற்றுநோயாளிகளில் 10 சதவிகிதம் பேர், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றம், மது, புகை போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மிருதுவான சவ்வினால் ஆன, குழல் போன்ற ஒரு பகுதி ஈசோபேகஸ். வாயில் மென்ற உணவை, வயிற்றுக்குக் கொண்டுசெல்லும் குழாய் இது. சாப்பிட்டவுடன் படுப்பதால், உணவுக்குழாயில் புண் (Esophagus reflux) ஏற்படுகிறது.

ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது?
வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.
மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகள்
நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளைத் தருகின்றனர். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம்.

ஆஸ்பிரின், முஸ்லின் போன்ற மாத்திரைகள் உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கிவிடும். அப்போது, ரத்த வாந்தி வர வாய்ப்புகள் அதிகம்.
உணவுக்குழாயைக் காக்க…
காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை,  பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்னையைச் சரிசெய்யும்.

உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!
உணவை எப்போதும் மென்று தின்னும் பழக்கம் அவசியம்.

காலை எழுந்ததும் ஒரு குவளை நீர் அருந்த வேண்டும்.
சீரக நீர் பருகுவதால், உணவுக்குழாய் தொடர்பான பிரச்னை வராது.
நீர், நார்ச்சத்து உணவுகளைப் பிரதானமாக சாப்பிடுவது நல்லது.
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

“காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலை கடுக்காய்… ஒரு மண்டலம் உண்ண வயோதிகனும் வாலிபன் ஆவானே” என்ற சித்தரின் வாக்குப்படி, காலையிலே உண்ணும் உணவுதான், உணவுக்குழாய்க்கு நாம் கொடுக்கும் முதல் உணவு.

கற்றாழை: 
காலையில் முதல் உணவாகப் பருகும்போது, இதில் உள்ள கொலஜன் மற்றும் ஃபைபர், புண்களைக் குணமாக்கிவிடும். எரிச்சல் உணர்வை நீக்கும். ஆன்டிகேன்சர் மற்றும் ஆன்டி டியூமராக கற்றாழை செயல்படுகிறது.

வெள்ளரி: 
வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உணவுக்குழாய் தொடர்பானப் பிரச்னையைச் சரிசெய்யும்.

இஞ்சி: 
இதில் உள்ள ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ், உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களை வரவிடாமல் செய்யும். உமிழ்நீர் சுரக்க உதவும். செரிமான செயல்பாடு எளிதாகும்.

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!
தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, இஞ்சி – சிறிதளவு, கற்றாழை – 3-4 துண்டுகள், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை
வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்
வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.